இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள் இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி, பிராணிகளை காக்க செலவிடுவர்.
ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன. அது, இப்போதும் உள்ளது.அந்த நம்பிக்கை தான், இந்த கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது. சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது நல்லது தானே!
சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர், இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி, கமலா ராமமூர்த்தியை, 98404 56623 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை. முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன். ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி, எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.
அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே, வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும் சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என், ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.