இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை. முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன். ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி, எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.
அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே, வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும் சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என், ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.